Thursday, January 22, 2015

கல்கி குழந்தை எழுத்தாளரா?

"இதென்ன கூத்து?" என்று உங்களுக்குத் தோன்றலாம்.

சமீபத்தில் எழுத்தாளர் ஜயமோகன் தான் இப்படி ஒரு கருத்தைச் சொல்லி இருந்தார். கல்கியின் எழுத்து மிகவும் எளிமையாகஒரு குழந்தைக்கும் புரியும் படியாக இருக்கிறதாம். ஆகவே அவர் சிறுவர்களுக்கு எழுதுபவராம்.

தன்னுடைய எழுத்தைப் படிப்பதற்கு ரொம்பவும் மெனக்கெட வேண்டும் என்று எழுதியிருந்தார்.

இதைப் படித்ததும் சிரிப்புத்தான் வந்தது. கல்கியின் எழுத்தைக் கொண்டாடும் எனக்கு முதலில் வந்த கோபத்துக்கு அளவே இல்லை. சரி, அந்த ஆளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று என்னையே சமாதானம் செய்து கொண்டேன்.

கல்கி, தேவன், சாவி முதலானோர் எழுத்தின் வலிமையே அதன் எளிமைதான். வேண்டாத சொற்கள் இருக்காது. அலங்கார நடை என்று இப்போது நினைத்துக் கொண்டு பேத்துகிறார்களே, அது சிறிதும் கிடையாது.

இலக்கியம் என்றால் புரியாமல் எழுத வேண்டும் என்று யார் சொன்னது?

கல்கி எழுதிய காலத்தில் எழுதுவதற்கு இப்போது இருக்கும் வசதிகள் கிடையாது. பத்திரிகைகள் தான் எழுத்து வர ஒரே வழி. இப்போது போல வலைப் பதிவு கிடையாது. எழுதுவதை சுலபமாக்கும் மென்பொருட்கள் இல்லை. இப்போது புழங்கும் பல வார்த்தைகள் அப்போது கிடையாது. ஆனாலும் மிக எளிதாகப் படித்துப் புரிந்து கொள்ளும் அளவில் அவர்கள் எழுத்துக்கள் இருந்தன.

கல்கி எழுதாத சரித்திரமா? நையாண்டி எழுத்தில் அவரை மிஞ்ச யார் இருக்கிறார்கள்? அவர் எழுதாத சமூகக் கதைகளா?

அடப் போங்கையா! 

0 comments: