Thursday, April 09, 2015

தேவன் மாஜிக்

இப்போதுதான் தேவனின் “மிஸ்டர் வேதாந்தம்” படித்து முடித்தேன். முன்னாலேயே படித்ததுதான். இப்போதும் அதே மாஜிக் இருப்பதுதான் விசேஷம். என்ன மாதிரி கதை சொல்லும் திறன்! என்ன ஒரு எழுத்து! இன்னும் மெய்மறந்து நிற்கிறேன். சில பாட்ஸ்மென் விளையாடும் போது மிகவும் சுலபமாக விளையாடுவது போல் இருக்கும். அப்படி விளையாடுவதற்குப் பின்னால் இருக்கும் கடுமையான உழைப்பு நமக்குத் தெரியாது. அவர்களைக் கேட்டால் சொல்லுவார்கள்....

Sunday, February 22, 2015

ஸ்பூர்த்தி ! ஸ்பூர்த்தி !

அப்பாடா! ஒரு வழியாக ஸ்பூர்த்தி ஜெயிச்சாச்சு! “ரொம்ப சந்தோஷமா இருக்கு.” “எல்லாம் இன்பமயம்” என்று ஸ்பூர்த்தி எடுத்ததுமே தெரிந்து விட்டது, இன்னிக்கு ஒரு சூப்பர் பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கப் போகிறாள் என்று. கொஞ்சமும் ஏமாற்ற வில்லை. பரத் வருவாரென்று நினைத்தேன். அது நடக்க வில்லை. அவர் எப்படியும் தனுஷுக்குப் பாடப் போகிறார். ஸ்ரீஷா வும் அப்படித்தான். பின்னணி பாட சான்ஸ் உன்டு என்று உறுதியளிக்கப் பட்டுள்ளது....

Friday, February 06, 2015

பிடித்த எழுத்தாளர்கள் – 2

ஆங்கிலத்தில் புத்தகம் படிக்க ஆரம்பித்தது கல்லூரி சென்ற பிறகுதான். உறவினர் ஒருவர் கல்லூரி நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொன்டு வந்து தருவார். அப்படி ஆரம்பித்ததுதான் ஆங்கிலப் புத்தகப் படிப்பு. எனிட் ப்ளைட்டன் எழுதியது போன்ற குழந்தைகளுக்கான புத்தகங்கள் படித்ததே கிடையாது. ஏனென்றால், புத்தகம் படிக்க ஆரம்பிக்கும் போது குழந்தைப் பருவம் போய் விட்டது. ஆரம்பத்தில் கஷ்டப் பட்டு ஏ.ஜே. க்ரானின், ஸாமர்ஸட்...

Thursday, February 05, 2015

பிடித்த எழுத்தாளர்கள்

படிப்பதில் ஆசை இருக்கும் எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளர்கள் இருப்பார்கள். எனக்கும் இருக்கிறார்கள். முதல் இடம் ‘கல்கி’க்குத்தான். நினைவு தெரிந்த நாளில் முதலில் படித்தது கல்கியின் எழுத்துக்கள்தான். மகா எளிமையான மொழி. கதை சொல்லும் உத்தியோ கேட்கவே வேண்டாம். அடுத்தது என்ன, அடுத்தது என்ன என்ற ஆவலைத் தூண்டும். படித்து முடிக்கும் வரை புத்தகத்தைக் கீழே வைக்கவே மனது வராது. “பொன்னியின் செல்வன்”, “சிவகாமியின்...

Friday, January 23, 2015

மொழிபெயர்ப்பு

எழுதும் ஆர்வம் வந்தபிறகு எதைப் பற்றி எழுதுவது என்பது பெரிய கேள்விக் குறியானது. சிறு கதையா? நாவலா? அபுனைவுக் கட்டுரைகளா? இப்படிப் பல கேள்விகள் எழுந்தன எனக்குள். ஏன் நல்ல புத்தகங்களை (ஆங்கிலத்தில் வந்ததை) மொழி பெயர்த்துப் பார்க்கக் கூடாது? இது எழுத்துக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று தோன்றியது. முதல் விஷயம், எழுதும் பொருளைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். ஏற்கனவே யாரோ ஒருவரெழுதி வைத்திருக்கிறார்....

Thursday, January 22, 2015

கல்கி குழந்தை எழுத்தாளரா?

"இதென்ன கூத்து?" என்று உங்களுக்குத் தோன்றலாம். சமீபத்தில் எழுத்தாளர் ஜயமோகன் தான் இப்படி ஒரு கருத்தைச் சொல்லி இருந்தார். கல்கியின் எழுத்து மிகவும் எளிமையாகஒரு குழந்தைக்கும் புரியும் படியாக இருக்கிறதாம். ஆகவே அவர் சிறுவர்களுக்கு எழுதுபவராம். தன்னுடைய எழுத்தைப் படிப்பதற்கு ரொம்பவும் மெனக்கெட வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைப் படித்ததும் சிரிப்புத்தான் வந்தது. கல்கியின் எழுத்தைக் கொண்டாடும் எனக்கு...

Wednesday, January 21, 2015

ஸ்பூர்த்தி என்கிற தேவதை

நீங்கள் சூப்பர் சிங்கர் ஜூனியர் பார்ப்பவரா? அப்படியானால் இந்தக் குட்டி தேவதையைத் தெரியாமல் இருக்க முடியாது. குட்டி உருவம். அதற்குள்ளே பூதாகரமான இசைத் திறன். கேட்பவரைக் கட்டிப் போடும் குரல், இசை ஞானம். பாடும் போது அந்த இசைக்குள் மூழ்கித் திளைத்து விகசிக்கும் உருண்டை முகம். இத்தனைக்கும் இந்தப் பெண்ணிற்கு 9 வயதுதான் ஆகிறது. அதற்குள் அபாரமான திறமை வெளிப்படுகிறது. கர்னாடக இசையில் கோர்த்த திரைப் பாடல்களைப்...

எப்படி எழுதுவது?

இது மிகவும் சுவாரசியமான கேள்வி. எழுத வேண்டும் என்று ஆசைப் படும் எல்லோருக்கும் எழும் கேள்வி இது. இந்தத் தலைப்பிலேயே நூறாயிரம் வலைப் பதிவுகள் இருக்கின்றன. அவை இலவசமாக ஆலோசனைகளை அள்ளி வழங்குகின்றன. அதைப் படிப்பவர்கள் இருப்பதால் தானே எழுதுகிறார்கள்? புகழ் பெற்ற எழுத்தாளர்களும் இதைப் பற்றி புத்தகங்களே எழுதியிருக்கிறார்கள். இப்படி எழுதிக் குவிக்கிறார்களே, இவர்கள் எப்படித்தான் எழுதுகிறார்கள் என்ற ரகசியத்தைத்...