எழுதும் ஆர்வம் வந்தபிறகு எதைப் பற்றி எழுதுவது என்பது
பெரிய கேள்விக் குறியானது. சிறு கதையா? நாவலா? அபுனைவுக் கட்டுரைகளா? இப்படிப் பல
கேள்விகள் எழுந்தன எனக்குள்.
ஏன் நல்ல புத்தகங்களை (ஆங்கிலத்தில் வந்ததை) மொழி
பெயர்த்துப் பார்க்கக் கூடாது? இது எழுத்துக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும்
என்று தோன்றியது. முதல் விஷயம், எழுதும் பொருளைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்.
ஏற்கனவே யாரோ ஒருவரெழுதி வைத்திருக்கிறார்....
Friday, January 23, 2015
Thursday, January 22, 2015
கல்கி குழந்தை எழுத்தாளரா?
"இதென்ன கூத்து?" என்று உங்களுக்குத் தோன்றலாம்.
சமீபத்தில் எழுத்தாளர் ஜயமோகன் தான் இப்படி ஒரு கருத்தைச் சொல்லி இருந்தார். கல்கியின் எழுத்து மிகவும் எளிமையாகஒரு குழந்தைக்கும் புரியும் படியாக இருக்கிறதாம். ஆகவே அவர் சிறுவர்களுக்கு எழுதுபவராம்.
தன்னுடைய எழுத்தைப் படிப்பதற்கு ரொம்பவும் மெனக்கெட வேண்டும் என்று எழுதியிருந்தார்.
இதைப் படித்ததும் சிரிப்புத்தான் வந்தது. கல்கியின் எழுத்தைக் கொண்டாடும் எனக்கு...
Wednesday, January 21, 2015
ஸ்பூர்த்தி என்கிற தேவதை
நீங்கள் சூப்பர் சிங்கர் ஜூனியர் பார்ப்பவரா? அப்படியானால்
இந்தக் குட்டி தேவதையைத் தெரியாமல் இருக்க முடியாது.
குட்டி உருவம். அதற்குள்ளே பூதாகரமான இசைத் திறன்.
கேட்பவரைக் கட்டிப் போடும் குரல், இசை ஞானம். பாடும் போது அந்த இசைக்குள் மூழ்கித்
திளைத்து விகசிக்கும் உருண்டை முகம்.
இத்தனைக்கும் இந்தப் பெண்ணிற்கு 9 வயதுதான் ஆகிறது.
அதற்குள் அபாரமான திறமை வெளிப்படுகிறது.
கர்னாடக இசையில் கோர்த்த திரைப் பாடல்களைப்...
எப்படி எழுதுவது?
இது மிகவும் சுவாரசியமான கேள்வி. எழுத வேண்டும் என்று ஆசைப்
படும் எல்லோருக்கும் எழும் கேள்வி இது.
இந்தத் தலைப்பிலேயே நூறாயிரம் வலைப் பதிவுகள் இருக்கின்றன. அவை
இலவசமாக ஆலோசனைகளை அள்ளி வழங்குகின்றன. அதைப் படிப்பவர்கள் இருப்பதால் தானே எழுதுகிறார்கள்?
புகழ் பெற்ற எழுத்தாளர்களும் இதைப் பற்றி புத்தகங்களே
எழுதியிருக்கிறார்கள். இப்படி எழுதிக் குவிக்கிறார்களே, இவர்கள் எப்படித்தான்
எழுதுகிறார்கள் என்ற ரகசியத்தைத்...
Subscribe to:
Posts (Atom)